பாதுகாப்புக்கு வந்த போலீசாரை திருப்பி அனுப்பிய பாஜக தலைவர்

பாதுகாப்பு கொடுக்க வந்த 2 போலீசாரை கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் திருப்பி அனுப்பி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள பாஜக மாநில தலைவராக இருப்பவர் சுரேந்திரன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த இரு வருடங்களுக்கு முன் சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக கேரளா முழுவதும் நடந்த போராட்டத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இதையடுத்து இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கேரள அரசுக்கு எதிராகவும், முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகவும் இவர் தினமும் ஏதாவது குற்றச்சாட்டுகளைக் கூறுவது வழக்கம்.
சமீபத்தில் தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வருக்கும், முதல்வர் குடும்பத்தினருக்கும் தொடர்பு உண்டு என்று சுரேந்திரன் கூறினார்.


இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டபோது, சுரேந்திரனுக்கு வேறு வேலை கிடையாது, அவரை எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டுமோ அப்படி பார்த்துக்கொள்கிறேன் என மிரட்டல் தொனியில் பதிலடி கொடுத்தார். பினராயி விஜயனின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாஜக தலைவர் சுரேந்திரனுக்கு சில தரப்பிலிருந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவருக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேரள உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தனக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்லை என்று ஏற்கனவே சுரேந்திரன் கூறியிருந்தார்.


இந்நிலையில் நேற்று சுரேந்திரனுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக 2 போலீசார் சென்றனர். ஆனால் அவர்கள் இருவரையும் சுரேந்திரன் திருப்பி அனுப்பி வைத்தார். இது குறித்து சுரேந்திரன் கூறுகையில், எனக்கு கேரள முதல்வர் பினராயி விஜயனிடமிருந்து மட்டும்தான் மிரட்டல் இருக்கிறது. வேறு யாராலும் எனக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. கேரள மக்கள் எனக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். எனவே போலீஸ் பாதுகாப்பு எனக்கு தேவையில்லை என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds