தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலிதளம் விலகல் .

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறி விட்டது என்று அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அறிவிததுள்ளார்.
ப ஞ்சாப் மாநிலம் முழுக்க விவசாயிகள் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சூழ்நிலையில் சிரோமணி அகாலி தளத் தலைவர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். சிரோமணி அகாலி தளத்தின் உயர்மட்ட கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் சண்டிகர் நகரில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாக பாதல் அறிவித்தார். வி வசாயிகளின் உணர்வுகளை மத்திய அரசு முழுக்க நிராகரித்துவிட்டது. வேளாண் சீர்திருத்த மசோதாக்களை பலவந்தமாக விவசாயிகள் மீது திணித்து உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


புதுடி ல்லியில் மாநிலங்களவை கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை நாடே அறியும்.சிரோமணி அகாலி தளத்தின் பிரதிநிதியாக மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார் ஹர்சிம்ரத் கவுர் பாதல். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சீர்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பதவியை அவர் உதறித் தள்ளினார். ந்தச் சூழ்நிலையில் சிரோமணி அகாலிதளம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கட்சியின் தலைவர்களுடனும் பொது மக்களுடனும் நான் பல சுற்று ஆலோசனை நடத்தினேன். அதனைத் தொடர்ந்து ஆளும் கூட்டணியிலிருந்து விலகுவது என்று முடிவு செய்யப்பட்டது என பாதல் அறிவித்தார்.
பா ஜக ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறுவதை அறிவிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டபூர்வ வாக்குறுதி எதனையும் வழங்க மத்திய அரசு தயாராக இல்லை. ப ஞ்சாபிலுள்ள விவசாயிகளின் உணர்வுகளை மத்திய அரசு புறக்கணித்துள்ளது. ஜ ம்மு-காஷ்மீரில் அலுவல் மொழிகளில் ஒன்றாக பஞ்சாபி சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் அந்தக் கோரிக்கையை கூட மத்திய அரசு ஏற்கவில்லை. எனவே இ ந்த சூழ்நிலையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற சிரோமணி அகாலிதளம் முடிவு செய்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds