பணத்தை திருப்பிக் கட்ட முடியவில்லை.. கடன் வாங்கிய வங்கிகளிலேயே கொள்ளை..

கொரோனா காரணமாக தொழில் நலிவடைந்து கடனை திருப்பிக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, தான் கடன் வாங்கிய வங்கிகளிலேயே துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தொழில்கள் நலிந்து விட்டன. வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் திருப்பி கட்ட முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒடிசாவில் வியாபாரம் நலிவடைந்ததால் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாத ஒரு வியாபாரி, அவர் கடன் வாங்கிய வங்கிகளிலேயே துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த மாதம் 7ம் தேதி புவனேஸ்வரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு வாலிபர் துப்பாக்கியை காட்டி ஊழியர்களை மிரட்டி 8 லட்சம் பணத்தை கொள்ளையடித்தார்.


இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 28ம் தேதி மஞ்சேஷ்வர் என்ற இடத்திலுள்ள பேங்க் ஆப் இந்தியா கிளையிலும் அதே பாணியில் துப்பாக்கி முனையில் 4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் 2 கொள்ளைகளையும் நடத்தியது ஒரே ஆள் தான் என தெரியவந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில் துணி வியாபாரியான சவும்யரஞ்சன் ஜனா (25) என்பவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், கொரோனா காரணமாக தனது தொழில் நலிவடைந்ததால் வேறு வழியின்றி வங்கிகளில் கொள்ளை அடித்ததாக கூறினார். அந்த வங்கிகளில் அவர் 19 லட்சம் கடன் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைக்கு பின் அவரை சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :