தமிழகத்தில் கொரோனா பலி 10 ஆயிரத்தை நெருங்குகிறது.. சென்னையில் மீண்டும் பரவல்..

corona deaths nearing 10 thousands in tamilnadu.

by எஸ். எம். கணபதி, Oct 7, 2020, 09:04 AM IST

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6 லட்சத்து 30,408 ஆக அதிகரித்துள்ளது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 9917 ஆக உயர்ந்துள்ளது. 5.75 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் தற்போது அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது.

நேற்று முன் தினம் புதிதாக 5395 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று (அக்.6) 5017 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 3 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 30,408 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.

அதே சமயம், தொற்றில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5548 பேரையும் சேர்த்து, இது வரை 5 லட்சத்து 75,212 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 71 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 9917 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அல்லது நாளை இது 10 ஆயிரத்தைத் தொட்டு விடும். தற்போது மாநிலம் முழுவதும் 45 ஆயிரத்து 279 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று புதிதாக 1306 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 156 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 75,484 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 283 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 263 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 37,757 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 33,746 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது. கோவை மாவட்டத்தில் புதிதாக 434பேருக்கும், சேலத்தில் 326 பேருக்கும், திருப்பூரில் 153 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 145 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 224 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 103 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 106 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 145 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
சென்னை, கோவை, தஞ்சை மண்டலங்களில் உள்ள மாவட்டங்களில்தான் கொரோனா பரவல் நீடிக்கிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவானோருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னையில் தினமும் புதிதாகத் தொற்று பாதிப்பவர் எண்ணிக்கை 800க்கும் குறைவாகச் சென்றது. ஆனால், கடந்த 2 வாரங்களாக இது மீண்டும் அதிகரித்து 1300ஐ தாண்டியுள்ளது. அதே போல், கொரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 10ல் இருந்து 42 ஆக அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் மீண்டும் கொரோனா பரவுவது தெரிய வந்துள்ளது.

You'r reading தமிழகத்தில் கொரோனா பலி 10 ஆயிரத்தை நெருங்குகிறது.. சென்னையில் மீண்டும் பரவல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை