அமெரிக்க அதிபருக்கு கோவில் கட்டிய வாலிபர் திடீர் மரணம். என்ன காரணம்?

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு தனது வீட்டுக்கு அருகே கோவில் கட்டிய தெலங்கானா வாலிபர் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தான் மரணத்திற்குக் காரணம் என்று டாக்டர்கள் கூறினர்.சினிமா நடிகர், நடிகைகளுக்கும், உள்ளூர் தலைவர்களுக்கும் சிலர் கோவில் கட்டி வழிபடுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு வாலிபர் வெளிநாட்டுத் தலைவர், அதுவும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கோவில் கட்டி வழிபட்டு வந்தார்.

தெலங்கானாவைச் சேர்ந்த புசா கிருஷ்ணா என்ற 38 வயதான இந்த வாலிபர் டிரம்பின் தீவிர ரசிகர் ஆவார். தன்னுடைய நண்பர்களிடம் ஆனாலும் சரி, உறவினர்களிடம் ஆனாலும் சரி எந்த நேரமும் டிரம்பை குறித்துத் தான் இவர் வாய் வலிக்காமல் பேசிக்கொண்டிருப்பார். இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த அனைவரும் இந்த வாலிபரை டிரம்ப் கிருஷ்ணா என்றுதான் செல்லமாக அழைத்து வந்தனர்.

டிரம்பின் மீது இருந்த அளவு கடந்த பாசமும், அன்பும் அதிகரித்ததைத் தொடர்ந்து கிருஷ்ணா தனது வீட்டுக்கு அருகே டிரம்புக்கு கோவில் கட்டி பூஜைகளை நடத்தி வழிபடத் துவங்கினார். இதன் பிறகு தான் இவர் தேசிய அளவில் பிரபலம் அடையத் தொடங்கினார். கடந்த 4 வருடங்களுக்கு முன் தன்னுடைய கனவில் டிரம்ப் வந்தால் தான் கோவிலைக் கட்டியதாக இவர் கூறுகிறார். தினமும் காலையிலும், மாலையிலும் இவர் பூஜை நடத்தி வழிபட்டு வந்தார். அதுமட்டுமில்லாமல் டிரம்பின் படம் போட்ட உடைகளை மட்டுமே அணிவது இவர் வழக்கம். இது தவிர இவரது வீட்டிலும் எங்குப் பார்த்தாலும் டிரம்பின் படம் தான் இருக்கும்.

இந்நிலையில் நேற்று இவர் திடீரென தனது வீட்டில் வைத்துச் சுருண்டு விழுந்து இறந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது மாரடைப்பு தான் மரணத்திற்குக் காரணம் எனக் கூறினர். டிரம்புக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அறிந்ததிலிருந்தே கிருஷ்ணா மிகவும் கவலையுடனும், அதிர்ச்சியுடனும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது டிரம்பை சந்திக்க வேண்டுமென இவர் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கூறிவந்தார். ஆனால் கடைசிவரை கிருஷ்ணாவால் அவருடைய கடவுளான டிரம்பை சந்திக்கவே முடியவில்லை. அடுத்த தேர்தலிலும் டிரம்ப் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று இவர் உறுதியாக நம்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :