கட்சியில் சில தலைவர்கள் என்னை ஒதுக்கினர் சோனியாவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில் குஷ்பு..!

பாஜகவில் சேருவதற்கு முன்பாக நடிகை குஷ்பு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். அதில், கட்சியில் சில தலைவர்கள் தன்னை ஒதுக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, சமீப நாட்களாகவே பாஜக பக்கம் சாய்ந்து வந்தார். இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கைக்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து இவர் கருத்துக்களை வெளியிட்டார். அன்று முதலே குஷ்பு பாஜகவில் சேரப்போவதாக தகவல் வெளியாயின. ஆனால் பலமுறை அந்த தகவலை குஷ்பு வெளிப்படையாகவே மறுத்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் ஹத்ராஸ் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் நடத்திய போராட்டத்திலும் இவர் கலந்து கொண்டார். அப்போதும், தான் பாஜகவில் சேரப் போவதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று மறுத்தார்.

இந்நிலையில் குஷ்பு பாஜகவில் சேரப் போவது தற்போது உறுதியாகி விட்டது. நேற்று இரவு இவர் தனது கணவர் சுந்தர் சியுடன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் வைத்து பத்திரிகையாளர்கள் கேட்டபோதும், எந்த தகவலையும் அவர் கூறவில்லை. நோ கமெண்ட்ஸ் என்று மட்டுமே கூறினார். இந்நிலையில் இன்று மதியம் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து அவர் பாஜகவில் சேர்வது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் இன்று அதிரடியாகக் காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டார்.

அதே நேரத்தில் சோனியா காந்திக்கு குஷ்பு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பது: காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும், கட்சியின் உறுப்பினராகவும் என்னை நியமித்து நாட்டுக்காகச் சேவை செய்ய வாய்ப்பு அளித்த உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை நான் இதுவரை மிக நல்ல முறையில் பயன்படுத்தி வந்துள்ளேன். ஆனால் மக்களுடன் எந்த தொடர்பும் இல்லாத, உண்மை நிலவரம் தெரியாத கட்சியில் உள்ள சில தலைவர்கள், சில சக்திகள் என்னைப் போல உண்மையுடன் கட்சிக்காக உழைப்பவர்களை ஒதுக்க முயற்சிக்கின்றனர்.

நான் பணத்திற்காகவோ, புகழுக்காகவோ காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. கட்சித் தலைவர்களில் சிலரது நடவடிக்கைகள் எனக்கு வேதனையை ஏற்படுத்தியது. எனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு குஷ்பு தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :