கொரோனா பாதித்த கர்ப்பிணி இரட்டை குழந்தைகளை பிரசவித்த பின்னர் மரணமடைந்த சோகம்.

கேரளாவில் கொரோனோ பாதித்த 8 மாத கர்ப்பிணி, இரட்டை குழந்தைகளை பிரசவித்த பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

கேரளாவில் கொரோனா நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் நோயாளிகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது. அன்று இந்தியாவிலேயே கேரளாவில் தான் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நோய் பரவல் அதிகரித்து வருவதால் கேரள அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனால் கேரளா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு ஏதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 8 மாத கர்ப்பிணி ஒருவர் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடக்கொச்சி பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி ராஜலட்சுமி (28). திருமணமாகி இவர்களுக்கு 8 வருடங்களாக குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன் ராஜலட்சுமி கர்ப்பிணியானார். கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ராஜலட்சுமி கொச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடத்தப்பட்டது. அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குழந்தைக்கும், ராஜலட்சுமிக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ராஜலட்சுமி நேற்று மரணமடைந்தார். இவரது உடல் இன்று கொச்சியில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே தீவிர சிகிச்சை காரணமாக கொரோனாவிலிருந்து குழந்தை மீண்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds