லாலுவுக்கு வேதனை மேல் வேதனை - 4ஆவது வழக்கில் 14 ஆண்டுகள் சிறை

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4-ஆவது வழக்கிலும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பீகார் மாநில முதல்வராக 1990 முதல் 1997 வரை லாலு பதவி வகித்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ரூ. 950 கோடி ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் தொடர்பாக, பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மொத்தம் 63 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.

இதனிடையே, தியோஹர் கருவூலத்தில் இருந்து 89 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் முறைகேடாக எடுக்கப்பட்டது தொடர்பான, லாலு மீதான வழக்கில் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனால் லாலு மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 18 நாட்களில் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான 3-ஆவது வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்திலிருக்கும் சாய்பாஷா கருவூலத்தில் ரூ. 33 கோடியே 67 லட்சம் கையாடல் செய்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில், லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

தும்கா கருவூலத்திலிருந்து ரூ. 3 கோடியே 97 லட்சமும், டோரண்டா கருவூலத்தில் ரூ. 184 கோடியும் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட 2 வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இந்நிலையில், தும்கா கருவூலத்தில் ரூ. 3 கோடியே 97 லட்சம் கையாடல் செய்த வழக்கிலும் லாலுவை குற்றவாளி என்று, மார்ச் 19ஆம் தேதி ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரம் மார்ச் 24-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

அதன்படி, மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4-ஆவது வழக்கில், தண்டனையை அறிவித்த ராஞ்சி சிறப்பு நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் லஞ்ச ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தலா 7 ஆண்டுகள் வீதம் லாலு பிரசாத்துக்கு மொத்தம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பளித்தது.

அதாவது, அடுத்தடுத்து 7 ஆண்டுகள் என மொத்தம் 14 ஆண்டுகள் அவர் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கில் லாலு-வுக்கு 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds