லாக்டவுன் காலத்தில் ஒழுங்காக கடனை அடைத்தவர்களுக்கு பரிசு...!

லாக்டவுன் காலத்தில் வங்கிகளில் வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தியவர்களுக்குப் பரிசு வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி ₹50 லட்சம் வரை கடன் வாங்கியவர்களுக்கு அதிகபட்சமாக ₹12,425 கிடைக்கும்.கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் திடீரென லாக்டவுன் அறிவித்தது. இதையடுத்து லட்சக்கணக்கானோர் தங்களது தொழில்களை இழந்தும், வருமானத்தை இழந்தும் அவதிப்பட்டனர்.

இதையடுத்து வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெரும்பாலானோர் சிரமப்பட்டனர். இதனால் லாக்டவுன் காலத்தில் இஎம்ஐ தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து முதலில் 3 மாதங்களுக்கும், பின்னர் 6 மாதங்களுக்கும் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ கட்டுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

ஆனால் அந்த 6 மாதத்திற்கான வட்டியும், கூட்டு வட்டியும் கட்ட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இது வாடிக்கையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் கூட்டு வட்டியை ரத்து செய்ய முடியாது என்றும், ரத்து செய்தால் வங்கிகளுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்றும் மத்திய அரசு கூறியது. ஆனால் கூட்டு வட்டியை ரத்து செய்தே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உறுதியாகக் கூறியது. இதையடுத்து வட்டியையும், கூட்டு வட்டியையும் ரத்து செய்ய மத்திய அரசு சம்மதித்தது.

இந்நிலையில் 6 மாதத்திற்கான இஎம்ஐ சலுகை பெற்றவர்களைப் போலவே ஒழுங்காக வட்டி கட்டியவர்களுக்கும் சலுகை அளிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி 6 மாதம் ஒழுங்காக இஎம்ஐ கட்டியவர்களுக்குப் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக ₹50 லட்சம் ஒருவர் வீட்டுக்கடன் வாங்கி இருந்தால் அவருக்கு ₹12,425 கிடைக்கும். இந்தப் பணம் அவரது அக்கவுண்டில் முதலீடு செய்யப்படும். வீட்டுக் கடன், கல்விக் கடன், கிரெடிட் கார்டு, வாகன கடன் உள்பட 8 பிரிவுகளில் கடன் வாங்கியவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :