சபரிமலை மண்டல கால பூஜை ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடங்குகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல கால பூஜைகளுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடங்குகிறது. மண்டல கால பூஜைகள் நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26 வரை நடைபெறும். கொரோனா பரவலை தொடர்ந்து கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டபோது தான் 7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது நடை திறக்கப்பட்டிருந்த 5 நாட்களில் தினமும் 250 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தினமும் 200 பேருக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே பக்தர்கள் தரிசனத்திற்கு வந்திருந்தனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. முன்பதிவு செய்யும்போது 48 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் இணைக்க வேண்டும். இந்த காரணங்களால் தான் சபரிமலையில் பக்தர்கள் வருகை மிக குறைவாக இருந்தது. இந்நிலையில் அடுத்த மாதம் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 15ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். மறுநாள் 16ம் தேதி முதல் டிசம்பர் 26 வரை 41 நாட்கள் மண்டல கால பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1,000 பக்தர்களையும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் 2,000 பக்தர்களையும் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மண்டல காலத்திலும் ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இம்முறை முன்பதிவு செய்யும் போது கொரோனா நெகட்டிவ் சான்றிதழை இணைக்கத் தேவையில்லை. தரிசனத்திற்கு வரும்போது 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும். இதற்காக சபரிமலை செல்லும் வழியில் பம்பை, நிலக்கல், பத்தனம்திட்டா உள்பட பல இடங்களில் பரிசோதனைக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பம்பை மற்றும் சன்னிதானத்தில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் சிறிய வாகனங்கள் பம்பை வரை அனுமதிக்கப்படும். பம்பையில் பக்தர்களை இறக்கிய பின்னர் வாகனம் நிலக்கல் பகுதிக்கு திருப்பி அனுப்பப்படும்.

மேலும் பம்பை நதியில் குளிப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பம்பை நதிக்கரையில் குளிப்பதற்காக ஷவர்கள் அமைக்கப்படும். பத்தனம்திட்டா, எருமேலி, வடசேரிக்கரை, நிலக்கல் வழியாக மட்டுமே இவ்வருடம் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்ற அனைத்து பாதைகளும் மூடப்படும். இதேபோல பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சுவாமி அய்யப்பன் ரோடு வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதுக்கு குறைவான மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட யாருக்கும் அனுமதி கிடையாது. சபரிமலை வந்த பின்னர் வெளிமாநில பக்தர்கள் யாருக்காவது கொரோனா உறுதி செய்யப்பட்டால் கேரளாவிலேயே உரிய சிகிச்சை வசதி ஏற்படுத்தப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளாவில் சிகிச்சை பெற விருப்பம் இல்லாவிட்டால் அவர்களது சொந்த மாநிலத்திற்கு செல்லவும் உரிய வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds