தந்தையின் உடலை 8 கி.மீ இழுத்துச் சென்ற மகன் மற்றும் மகள்!

உத்திரபிரதேசத்தில் உடல் நலக்குறைவால் இறந்தபோன தந்தையின் உடலை, மகனும், மகளும் 8 கி.மீ தொலைவிற்கு இழுத்துச் சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

Mar 28, 2018, 15:42 PM IST

உத்திரபிரதேசத்தில் உடல் நலக்குறைவால் இறந்தபோன தந்தையின் உடலை, மகனும், மகளும் 8 கி.மீ தொலைவிற்கு இழுத்துச் சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் பாராங்கி பகுதியைச் சேர்ந்தவர் மன்ஷரம். இவர் உடல் நலக்குறைவால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி மன்ஷரம் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது சடலத்தை எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் வழங்க மறுத்தது.

இதையடுத்து வேறு வழியில்லாமல் அவரது மாற்று திறனாளி மகனும் சிறுவயது மகளும் சுமார் 8 கி.மீ தூரம் ரிக்சாவில் வைத்து இழுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரப்பிரதேசத்தில் பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தந்தையின் உடலை 8 கி.மீ இழுத்துச் சென்ற மகன் மற்றும் மகள்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை