ஐஏஎஸ் அதிகாரிக்கு ஸ்வப்னா கொடுத்த பிறந்தநாள் பரிசு என்ன தெரியுமா?

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் தற்போது அமலாக்கத் துறையின் காவலில் உள்ள கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு சர்ச்சை நாயகி ஸ்வப்னா ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் விலை உயர்ந்த பரிசுகளை கொடுத்து குஷிப்படுத்தி உள்ளார். இந்த வருடம் பிறந்த நாளுக்கு அவர் 1 லட்சம் மதிப்புள்ள ஐபோனை பரிசாக கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா மீது தேசிய புலனாய்வு அமைப்பு, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத்துறை ஆகிய மூன்று மத்திய விசாரணை அமைப்புகளும் வழக்கு பதிவு செய்துள்ளன. இது போதாதென்று கேரள போலீசாரும் இவர் மீது ஒரு மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சுங்க இலாகா இவர் மீது காபிபோசா சட்டத்தின் கீழும், தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளது.

இத்தனை கடுமையான வழக்குகள் உள்ளதால் சமீப காலத்தில் ஸ்வப்னாவால் சிறையை விட்டு வெளி வர முடியாத நிலை உள்ளது. தற்போது இவர் திருவனந்தபுரத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஸ்வப்னாவுக்கும், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் மிக நெருங்கிய பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. இருவரும் பிறந்த நாளின் போது விலை உயர்ந்த பரிசுகளை பரஸ்பரம் பரிமாறி வந்துள்ளனர். இருவருமே விசாரணையில் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். கடந்த 3 வருடங்களாக தனக்கு ஸ்வப்னா பிறந்த நாளின் போது விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி வந்ததாக சிவசங்கர் மத்திய அமலாக்கத்துறையிடம் தெரிவித்துள்ளார். கடந்த இரு வருடங்களுக்கு முன் பிறந்த நாளின் போது இரண்டு விலையுயர்ந்த வாட்சுகளையும், கடந்த வருடம் லேப்டாப்பும் ஸ்வப்னா பரிசாக வழங்கியதாக சிவசங்கர் கூறியுள்ளார்.

இந்த வருடம் ஜனவரியில் பிறந்தநாள் கொண்டாடிய போது ஸ்வப்னா தனக்கு 1 லட்சம் மதிப்புள்ள ஐபோனை தந்ததாக சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஸ்வப்னா மற்றும் அவரது குடும்பத்தினரின் பிறந்தநாளுக்கு சிவசங்கரும் ஏராளமான விலை மதிப்புள்ள பரிசுகளை வழங்கியுள்ளார். ஸ்வப்னா தனக்கு தந்த பரிசுகளுக்கு நன்றிக் கடனாக கேரள அரசின் பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்த ரகசிய ஆவணங்களை அவருக்கு சிவசங்கர் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :