முகக்கவசம் அணிய சிரமம் உள்ளவர்களுக்கு துபாய் அரசு சலுகை

முகக்கவசம் அணிவதால் உடல் ரீதியாகச் சிரமம் ஏற்படுபவர்களுக்குச் சலுகை அளிக்கத் துபாய் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக இணையதளத்தில் விண்ணப்பித்தால் 5 நாட்களில் தேவையான உதவிகள் கிடைக்கும்.கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கது முகக் கவசம் அணிவது ஆகும். இதனால் அனைத்து நாடுகளிலும் பொது இடங்களில் செல்பவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு எதிராக அபராதம் உள்படச் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் என்றாலும் முகக் கவசம் அணிவதன் மூலம் உடல் ரீதியாகச் சிரமப்படுபவர்களும் இருக்கின்றனர். குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகள் கடும் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.

இந்நிலையில் முகக்கவசம் அணிவதால் உடல் ரீதியாகத் துன்பப்படுபவர்களுக்குச் சலுகை அளிக்கத் துபாய் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சலுகை தேவைப்படுபவர்கள் துபாய் சுகாதாரத் துறையின் http://dxbpermit.gov.ae என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் உடல் ரீதியான பிரச்சினை குறித்த மருத்துவ சான்றிதழையும் இணைக்க வேண்டும். இதன்படி விண்ணப்பித்தால் 5 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களைத் துபாய் அரசின் சுகாதாரத் துறை கமிட்டி பரிசீலிக்கும்.

பொது மக்களின் சுகாதார நலனுக்காகவே இந்த சலுகை அளிக்கப்படுகிறது என்று துபாய் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர் விண்ணப்பத்துடன் எமிரேட்ஸ் ஐடியையும் கண்டிப்பாகத் தாக்கல் செய்ய வேண்டும். முகத்தில் இருந்து ரத்தம் கசியும் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சொறி, வறண்ட தோல் உள்ளவர்கள், வாய், மூக்கு முகம் ஆகியவற்றில் சொறி இருப்பவர்கள், முகத்தில் தொடர்ந்து வீக்கம் உள்ளவர்கள், ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்கப்படும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :