பீகாரில் நோட்டா தந்த அதிர்ச்சி! ஆட்டம் கண்ட அரசியல் கூடாரங்கள்!

பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் ஒருவழியாக முடிந்து ஆளும் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக் கட்சிகள் மொத்தம் உள்ள 243 இடங்களில் 125 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து களம் கண்ட மெகா கூட்டணியான ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 110 இடங்கள் மட்டுமே கிடைத்தது‌.இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 4வது முறையாக நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை ஏற்கிறார்.

மேலும் பீகார் தேர்தல் புள்ளி விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது‌. இதன்படி பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டமாகத் தேர்தல் நடந்தது. பீகார் மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.3 கோடி ஆகும். இதில் கிட்டத்தட்ட 4 கோடிக்கும் அதிகமானோர் தங்கள் ஜனநாயக கடமையைச் செய்துள்ளனர். அதாவது பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மொத்தம் 57.09 சதவீதமாகும்.

ஆனால் இந்த 57.09 சதவீதத்தில் கிட்டத்தட்ட 1.7 சதவீதம் அதாவது 7 இலட்சத்து 6 ஆயிரத்து 252 வாக்குகள் "நோட்டாவில்" விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாக்காளர் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத பட்சத்தில் நோட்டாவில் வாக்களிக்கலாம் என்ற நடைமுறை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி 2013 ம் ஆண்டில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.இதற்கு முன்னர் வாக்களிக்க விரும்பாத பட்சத்தில் வாக்குச்சாவடியில் உள்ள 49-ஓ என்ற படிவத்தை நிரப்பி அளிக்க வேண்டும்.

பீகார் சட்டமன்றத்தில் பல தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசத்தை விட நோட்டாவின் சதவீதம் அதிகமாக விழுந்துள்ளது. இது அரசியல் தலைவர்கள், கட்சிகள் மற்றும் ஆட்சியாளர்கள் இடையே பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்த வாக்குகள் எதிரணியில் இருந்த மெகா கூட்டணிக்கு விழுந்திருந்தால் பாஜக கூட்டணியின் கூடாரம் பீகாரில் திவாலாகியிருக்கும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :