நடிகை பலாத்கார வழக்கு எம்எல்ஏ உதவியாளர் நேரில் ஆஜராக போலீஸ் நோட்டீஸ்

பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரில் நடிகரும், எம்எல்ஏவுமான கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப் குமார் 2 நாட்களுக்குள் நேரில் ஆஜராக கூறி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

பிரபல மலையாள நடிகை 3 வருடங்களுக்கு முன் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட நடிகையின் கோரிக்கைக்கு ஏற்ப ஒரு பெண் நீதிபதி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இந்த நீதிமன்றத்தின் விசாரணை ஒருதலைப்பட்சமாக இருப்பதாக பாதிக்கப்பட்ட நடிகை, அரசுத் தரப்பு மற்றும் போலீஸ் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நாளை (16ம் தேதி) வரை விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளில் ஒருவரான விபின்லால் என்பவர் தன்னுடைய வாக்குமூலத்தை மாற்றக்கோரி தனக்கு மிரட்டல் வருவதாக போலீசில் புகார் செய்திருந்தார். இவர் கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள பேக்கல் என்ற இடத்தில் வசித்து வருகிறார். இது தொடர்பாக இவர் பேக்கல் போலீசில் புகார் செய்திருந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் விபின்லாலை மிரட்டியது கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவும், நடிகருமான கணேஷ்குமாரின் அலுவலக செயலாளர் பிரதீப் குமார் என தெரியவந்தது. இவர் விபின்லாலை போன் மூலமும், நேரடியாகவும் சென்று மிரட்டியுள்ளார். நடிகர் திலீப்புக்கு ஆதரவாக வாக்குமூலத்தை மாற்றினால் வீடு கட்டுவதற்கு பண உதவி செய்வதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். விபின்லாலை மிரட்டுவதற்காக குற்றாலத்தை சேர்ந்த ரத்தினம் என்பவர் பெயரில் எடுக்கப்பட்ட சிம்கார்டை பிரதீப்குமார் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 2 நாட்களுக்குள் நேரில் ஆஜராக கூறி பிரதீப் குமாருக்கு பேக்கல் போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :