மண்டல கால பூஜை சபரிமலை கோவில் நடை திறப்பு நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 41 நாள் நடைபெறும் மண்டல கால பூஜைகள் நாளை முதல் தொடங்குகின்றன. பக்தர்கள் நாளை முதல் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மண்டல காலம் என்பது சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

கார்த்திகை 1ம் தேதி தொடங்கி 41 நாட்கள் நடைபெறும் இந்த மண்டல கால பூஜையின் போது சபரிமலை ஐயப்பனை தரிசிக்க தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் செல்கின்றனர். இதனால் மண்டல காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சில நாட்களில் 20 மணி நேரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் காத்திருந்து ஐயப்பனை தரிசிப்பது உண்டு. ஆனால் இவ்வருடம் கொரோனா பரவல் காரணமாக நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. கடந்த மாதம் முதல் தான் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதுவும் கடும் நிபந்தனைகளுடன் தினமும் 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பிரசித்திபெற்ற மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நாளை முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. நாளை முதல் தினமும் 1,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சனி, ஞாயிறு தினங்களில் மட்டும் 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வழக்கமாக மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படும் போது சபரிமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். ஆனால் இன்று நடை திறந்த போது கோவில் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் மட்டுமே காணப்பட்டனர். பக்தர்கள் இம்முறை சபரிமலைக்கு 2 வழிகளில் மட்டுமே செல்ல முடியும்.

எருமேலியிலிருந்து கணமலை வழியாக பம்பைக்கும், வடசேரிக்கரை யிலிருந்து லாகா வழியாக மட்டுமே பம்பை செல்ல முடியும். புல்மேடு, வண்டிப்பெரியார் உட்பட மற்ற அனைத்து பாதைகளும் மூடப்படும். இதேபோல பம்பையில் இருந்து சன்னிதானம் செல்வதற்கு சுவாமி அய்யப்பன் ரோடு வழியாகவே செல்ல முடியும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds