போலியாக புதிய வங்கி கிளையே தொடங்கி மோசடி செய்த பலே ஆசாமி!

பாஜக ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தில் தனியார் வங்கியின் போலி கிளையை ஆரம்பித்து மக்களை ஏமாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தின் முலாயம் நகரில் வினோத் குமார் கம்ளே என்ற நபர் சில மாதங்களுக்கு முன்பு, தான் கர்நாடக வங்கியின் கிளை மேல் அதிகாரி என்று கூறியுள்ளார். பின்பு, இந்த பகுதியில் கூடிய விரைவில் கர்நாடக வங்கியின் மற்றொரு கிளை ஒன்றும் வர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, அதே பகுதியில் வங்கி கிளை செயல்படுவதற்கு இடத்தையும் தேர்வு செய்து அங்கு அந்த கிளையில் வேலை பார்ப்பதற்கு படித்த இளைஞர்கள் 5 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். சிலர், 10 லட்சம் ரூபாய் வரையிலும், நிரந்தர கணக்குத்தொகையும் வைத்துள்ளனர்.

இந்நிலையில், அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட ஒருவர், டில்லி கர்நாடக வங்கிக்கு தகவல் கால் செய்து வினோத் குமார் கம்ளே பற்றி விசாரித்துள்ளார். அப்போது, அவர்கள் இப்படி ஒரு பெயர் கொண்ட அதிகாரி தங்கள் வங்கியில் இல்லை என்றும், முகலாயம் நகரில் கர்நாடக வங்கியின் கிளை தொடங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

பின்பு, அந்த நபர், கம்ளே குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் விசாரணைக்கு வந்த போது கம்ளே அதிகாரிகள் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க பதில் சொல்லாமல் தொடர்ந்து தவறான தகவலை அடுத்த வந்த நிலையில் விசாரணையில், கம்ளே தான் போலி வங்கி அதிகாரி என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், பொதுமக்கள் அதிகளவில் பணத்தை டெபாசிட் செய்த பின்பு, அந்த பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு வெளிநாட்டிற்கு தப்பித்து செல்லவும் திட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து வினோத் குமார் கம்ளேவை காவல் துறையினர் கைது செய்தனர்.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds