உலக சுகாதார நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா!
கொரோனா பாதிப்பு தொடங்கிய காலம் முதல் இதுவரை உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தில் பணிபுரியும் 65 ஊழியர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, கொரோனா தொடங்கியதில் இருந்து இதுவரை
65 ஊழியர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வீட்டில் இருந்தே பணிபுரிபவர்களும் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.தலைமையக வளாகத்தில் வேறுயாருக்காவது கொரோனா பாதிப்பு பரவியுள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ஜெனீவா தலைமையக ஊழியர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்புடன் தொடர்புடைய அனைவரையும் தடமறிந்து கொரோனா பரிசோதனை செய்யவும், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 8 வாரங்களில் மட்டும் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபர தகவலின்படி உலக அளவில் இதுவரை
5 கோடியே 46 லட்சத்து 78 ஆயிரத்து 159 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 13 லட்சத்து 21 ஆயிரத்து 403 பேர் பலியாகியுள்ளனர்.
You'r reading உலக சுகாதார நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா! Originally posted on The Subeditor Tamil
More India News