சிமென்ட் விலை அதிகரிப்பு கட்டுமான துறையினர் அதிர்ச்சி!

இந்தாண்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத பட்சத்தில், அடுத்தடுத்த பொருட்களின் மீதான விலை உயர்வு மக்களை இன்னும் பொருளாதார வீழ்ச்சிக்குத் தள்ளிக்கொண்டு செல்கிறது.வெங்காய விலை உயர்வு, உருளைக்கிழங்கு விலை உயர்வு இந்த வரிசையில் சிமென்ட் விலையும் உயரதொடங்கியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரைக் கட்டமான துறையில் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களின் வாழ்வாதாரமே இந்த துறையை நம்பித்தான் உள்ளது. இந்நிலையில், சிமென்ட் விலை, திடீரென மூட்டைக்கு, 30 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதால், கட்டுமான துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஊரடங்கு காலத்தில், கட்டுமான பணிகள் முற்றிலுமாக முடங்கின. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கும் நிலையில், சிமென்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சிமென்ட் நிறுவனங்கள், 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டையின் மீதான விலையில், 60 முதல் 100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளனர்.ஜூன் மாதம் ஏற்பட்ட இந்த விலை உயர்வால்,கட்டுமான பணிகள் துவங்குவது தாமதமானது. பண்டிகை காலம் முடிந்த நிலையில், கட்டுமான பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள இத்துறையினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், தற்போது மீண்டும் சிமென்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்த துறை சார்ந்தவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியக் கட்டுமான வல்லுனர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.ராமபிரபு கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த சிமென்ட் நிறுவனங்கள், எவ்வித அடிப்படை காரணமும் இன்றி விலையை உயர்த்தி வருகின்றன. மூட்டைக்கு, 60 ரூபாய் உயர்த்தப்பட்ட சில மாதங்களில், மீண்டும் மூட்டைக்கு, 30 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான நிறுவனங்களும், வீடு கட்ட நினைக்கும் பொது மக்களும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். விலை உயர்வால், 410 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை சிமென்ட், தற்போது, 440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இது குறித்து தமிழக அரசும், மத்திய அரசும் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :