கேரளாவில் எதிர்க்கட்சித் தலைவர், 2 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மது பார்கள் திறப்பதற்கு லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட புகாரில் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் 2 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தக் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவில் கடந்த உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த போது 700க்கும் மேற்பட்ட மது பார்கள் மூடப்பட்டன. இதனால் பார் உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.

இதையடுத்து மூடப்பட்ட பார்களை திறப்பதற்காகப் பார் உரிமையாளர்கள் அப்போது கலால் துறை அமைச்சராக இருந்த பாபுவை அணுகினர். இதையடுத்து 418 பார்களை மீண்டும் திறக்க அவர் அனுமதி அளித்தார். இந்நிலையில் கேரள மது பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான பிஜு ரமேஷ் என்பவர் சமீபத்தில் ஒரு பரபரப்பு புகாரைக் கூறினார்.

கடந்த ஆட்சியில் 418 மது பார்களை திறப்பதற்காக அப்போதைய உள்துறை அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னித்தலாவுக்கு 1 கோடியும், அமைச்சர் பாபுவுக்கு 50 லட்சமும், அமைச்சர் சிவகுமாருக்கு 20 லட்சமும் கொடுத்ததாகக் கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பிஜு ரமேஷ், கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தார்.இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் 2 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை நடத்தக் கேரள அரசு தீர்மானித்துள்ளது. ரமேஷ் சென்னித்தலாவும், சிவகுமாரும் தற்போது எம்எல்ஏக்களாக இருப்பதால் அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய கவர்னரின் அனுமதி தேவையாகும்.

இதையடுத்து கவர்னரிடம் அனுமதி கோரக் கேரள அரசு முடிவு செய்துள்ளது. கவர்னர் அனுமதி அளித்தால் உடனடியாக 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறியுள்ளார். தங்கக் கடத்தல் வழக்கில் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாலும், உள்ளாட்சித் தேர்தல் வரவிருப்பதாலும் தான் அரசு இந்த தேவையில்லாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :