இதுவரை 3,356 பேர் மரணம் கேரளாவில் கொரோனா மரணங்களை குறைத்து காண்பிப்பதாக பிபிசி பரபரப்பு தகவல்

கேரளாவில் கொரோனா நோய் பாதித்து மரணமடைபவர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிப்பதாக பிபிசி நிறுவனம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,356 என்றும், ஆனால் கேரள அரசின் கணக்கில் 1,969 பேர் மட்டுமே மரணமடைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். கொரோனாவின் பிறப்பிடமான சீனாவிலுள்ள வுஹானில் படித்துவந்த கேரளாவைச் சேர்ந்த 3 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரவியது. வுஹானிலிருந்து கேரளா திரும்பிய இவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 3 பேருக்கும் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் பலனாக அவர்கள் உடல்நலம் தேறினர். இதன் பிறகு வேறு யாருக்கும் நோய் பரவாமல் இருந்தது. ஒரு சில வாரங்களுக்குப் பின்னர் இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய ஒரு குடும்பத்தினர் மூலம் கேரளாவில் இரண்டாவது கட்டமாக நோய் பரவ தொடங்கியது. இதன் பிறகு கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. ஆனாலும் தொடக்கத்தில் கேரளாவில் நோய் பரவல் கட்டுக்குள் தான் இருந்தது. பல்வேறு உலக நாடுகளும் கேரளாவின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பாராட்டியது. ஆனால் தற்போது மற்ற மாநிலங்களில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதேபோல தொடக்கக் கட்டத்தில் கேரளாவில் கொரோனா பாதித்து மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவாகவே இருந்தது. ஒரு வாரத்தில் அதிகபட்சமாக 10 அல்லது 15 பேர் தான் மரணமடைந்தனர். ஆனால் தற்போது மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாகச் சராசரியாகத் தினமும் 25க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதித்து இறக்கின்றனர். இன்றும் 25 பேர் மரணமடைந்தனர்.

இதையடுத்து மரண எண்ணிக்கை 2,022 ஆக உயர்ந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கேரளா உண்மையான மரண எண்ணிக்கையை வெளியிடவில்லை என்று பிபிசி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை கேரளாவில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,356 என்றும், ஆனால் அன்று வரை கேரளாவில் 1,969 பேர் மட்டுமே மரணமடைந்ததாக அரசு தெரிவித்துள்ளது என்றும் பிபிசி கூறுகிறது. டாக்டர் அருண் என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :