சமூக இணையதளங்களில் அவதூறு, மிரட்டல் விடுத்தால் 5 வருடம் சிறை

சமூக இணையதளங்களில் தனி நபருக்கு எதிராகவோ, பெண்களுக்கு எதிராகவோ அவதூறு கருத்துக்களை பரப்புவது மற்றும் மிரட்டல் விடுப்பவர்களுக்கு எதிராக கேரளாவில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி இந்த குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 5 வருடம் சிறைத் தண்டனை கிடைக்கும். இந்த புதிய அவசர சட்டத்திற்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் ஒப்புதல் அளித்துள்ளார். 2000 ஆண்டின் ஐடி சட்டம் 66-ஏ பிரிவு மற்றும் 2011 கேரளா போலீஸ் சட்டம் 118 டி பிரிவு ஆகியவை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதன் பின்னர் சமூக இணையதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புபவர்களுக்கு எதிராக எந்த சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வரவில்லை. இந்நிலையில் கேரளாவில் சமூக இணையதளங்களில் தனிப்பட்ட நபருக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் அவதூறு கருத்துக்களை பரப்புபவர்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கேரள அரசு அதை கண்டுகொள்ளாமல் அவசர சட்டத்தை கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. கடந்த 10 மாதங்களுக்கு முன் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதில் கையெழுத்திடாமல் இருந்து வந்தார். ஏற்கனவே உச்சநீதிமன்றம் ரத்து செய்த சட்டப்பிரிவு என்பதால் இது தொடர்பாக அவர் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து வந்தார். இந்நிலையில் கேரள அரசின் இந்த அவசர சட்டத்திற்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி சமூக இணையதளங்களில் அவதூறு பரப்புவர்கள் மீது வாரண்ட் இல்லாமல் போலீசாரால் வழக்கு பதிவு செய்ய முடியும்.

யாரும் புகார் செய்ய வேண்டிய தேவையில்லை. புகார் இல்லாமலேயே போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யலாம். இதன்படி 5 வருடம் சிறைத் தண்டனை அல்லது 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இந்த அவசர சட்டத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்காகவும், அரசுக்கு எதிரான கருத்துக்களை பரப்புபவர்களை அடக்குவதற்கும் தான் இந்த அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :