சபரிமலையில் தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்த்த விரைவில் முடிவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்றும், இன்றும் 4,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்த்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக தினமும் 1,000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நேற்றும், இன்றும் 2 நாளில் 4,000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை பக்தர்களின் வருகை குறைந்துள்ளதால் கோவில் வருமானம் கடுமையாக குறைந்துள்ளது.

கோவில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தினசரி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் கேரள சுகாதாரத் துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே சபரிமலை செல்லும் பக்தர்களை பரிசோதிப்பதற்காக சபரிமலையில் 500க்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரித்தால் சுகாதாரத் துறையினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே கேரளா முழுவதும் கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதால் சுகாதாரத் துறை ஊழியர்கள் பெரும்பாலானோர் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் ஊழியர்கள் தட்டுப்பாடு கடுமையாக இருப்பதால் சபரிமலையில் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க முடியாது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆனால் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கா விட்டால் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் நிலைமை மோசமாகி விடும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவசம் போர்டு தலைவர் வாசு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனிடம் நேரில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து விரைவில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். இதனால் இன்னும் ஒருசில தினங்களில் பக்தர்கள் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. ஏற்கனவே நடை திறந்த பின்னர் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கேரள உயர்நீதிமன்றமும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :