பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

ஆந்திரா மாநிலத்தை பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் ராதிகா ரெட்டி தனது அபார்ட்மெண்டின் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

Apr 2, 2018, 19:40 PM IST

ஆந்திரா மாநிலத்தை பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் ராதிகா ரெட்டி தனது அபார்ட்மெண்டின் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திராவில் வி6 என்னும் செய்தித் தொலைக்காட்சி உள்ளது. அந்த தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பெண் செய்தி வாசிப்பாளர் ராதிகா ரெட்டி. 36 வயதாகும் இவர் ஆறு ஆண்டுகளுக்கு முன் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனது தந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் மனவளர்ச்சி குன்றிய ஒரு மகனும் இருக்கிறார்.

இந்நிலையில் ஞாயிறு இரவு ராதிகா ரெட்டி ஹைதாராபாத்தின் மூஸாபேட் பகுதியில் உள்ள தனது ஸ்ரீவில்லா அபார்ட்மெண்ட்டின் ஐந்தாவது மாடியில் இருந்து, கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட அவரது கைப்பையிலிருந்து தெலுங்கில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று மீட்கப்பட்டது. அதில், 'என் மூளையே எனக்கு எதிரி; என் சாவுக்கு யாரும் காரணமில்லை’ என்று குறிப்பிடப்பட்டு இருந்ததது. அவரது தற்கொலைக்கு மன அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை