கேரளாவில் டியூஷன், கம்ப்யூட்டர் சென்டர்கள், நடனப் பள்ளிகள் திறக்க அனுமதி

கேரளாவில் டியூஷன் மற்றும் கம்ப்யூட்டர் சென்டர்கள், நடனப் பள்ளிகள் மற்றும் தொழிற் பயிற்சி மையங்கள் நிபந்தனைகளுடன் திறந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு சட்ட நிபந்தனைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 10 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி புதுச்சேரி, ஆந்திரா உட்பட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டன. கேரளாவில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் உட்பட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட மாட்டாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டியூசன், கம்ப்யூட்டர் சென்டர்கள் மற்றும் தொழிற் பயிற்சி மையங்களை திறக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் பரவல் சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு சட்ட நிபந்தனைகளில் சில தளர்வுகளை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி டியூஷன் சென்டர்கள், கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள், தொழிற்பயிற்சி மையங்கள் மற்றும் நடனப் பள்ளிகளை நிபந்தனைகளுடன் திறக்கலாம். இங்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 100 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

முகக் கவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது உள்பட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 50 பேரும், இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 25 பேரும் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட பல கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்த பின்னரே முடிவு எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :