தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் சிறையில் இருந்தும் நான் வெற்றி பெறுவேன் பாஜகவுக்கு சவால் விடும் மம்தா பானர்ஜி

பாஜக நமது நாட்டின் சாபம், தைரியம் இருந்தால் என்னை அவர்கள் கைது செய்யட்டும். சிறையில் இருந்தும் நான் வெற்றி பெறுவேன் என்று கொல்கத்தாவில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.

மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தைக் கைப்பற்ற பாஜக மிகத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அமித்ஷாவின் நேரடி கண்காணிப்பில் பாஜக மேற்கு வங்கத்தில் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தை மம்தா பானர்ஜி இப்போதே தொடங்கி விட்டார். கொல்கத்தாவில் இன்று நடந்த சட்டசபை தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தை அவர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது பாஜகவை அவர் கடுமையாக தாக்கி பேசினார்.

பாஜக ஒரு அரசியல் கட்சியல்ல. இக்கட்சி பொய்களின் கூடாரமாகி விட்டது. தேர்தல் நெருங்கும் போதெல்லாம் நாரதா சாரதா எனக் கூறிக்கொண்டு திரிணாமுல் கட்சித் தலைவர்களை மிரட்டுவது தான் அவர்களது வேலையாகும். ஆனால் ஒரு விஷயத்தை நான் சொல்கிறேன், பாஜகவையோ, அவர்களது விசாரணை அமைப்புகளையோ நான் பயப்பட போவதில்லை. அவர்களுக்கு தைரியம் இருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும். நான் சிறையில் இருந்தபடியே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன். அடுத்த தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் தான் கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். எங்கள் கட்சித் தலைவர்களை பணத்தை கொடுத்து தங்களது கட்சிக்கு இழுக்க திட்டமிடுகின்றனர். ஒரு எம்எல்ஏவுக்கு 2 கோடி விலை பேசுகின்றனர். இதனால் பாஜகவை எப்படி ஒரு அரசியல் கட்சி என அழைக்க முடியும். அவர்கள் இந்த நாட்டிற்கே அவமானம் ஆகும். பாஜக மேற்கு வங்காளத்தில் ஆட்சி அமைக்கும் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அது கனவில் கூட நடக்காது. நாங்கள் தான் மீண்டும் அதிக தொகுதிகளைக் கைப்பற்றி அரியணையில் அமருவோம். பீகாரில் பாஜகவின் வெற்றி உண்மையான வெற்றி அல்ல. அது மக்கள் தீர்ப்பு அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds