நடிகை பலாத்கார வழக்கு விசாரணை நடத்துவதில் திடீர் சிக்கல்

அரசுத் தரப்பு வழக்கறிஞர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால் மலையாள நடிகை பலாத்கார வழக்கு விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்கும் வரை விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஹனி வர்கீஸ் என்ற பெண் நீதிபதி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இந்த தனி நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் சாட்சிகளிடம் விசாரணையும், குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விசாரணை நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகப் பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டு வாரங்களுக்கு விசாரணையை நிறுத்தி வைத்தது. பின்னர் இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற முடியாது என்றும், விசாரணை நீதிமன்றமும், அரசுத் தரப்பும் இணைந்து செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தது. இதையடுத்து கடந்த 23ம் தேதி விசாரணை மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில் அரசுத் தரப்பு சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் சுரேசன் தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்தார். விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற அவருடைய கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாததாலும், தன்னைக் குறித்து வந்த மொட்டைக் கடிதத்தை விசாரணை நீதிமன்றம் வாசித்தது தொடர்பான புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததாலும் தான் இவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து விசாரணை மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. அரசுத் தரப்பு வழக்கறிஞரின் ராஜினாமாவை இதுவரை கேரள அரசு ஏற்கவில்லை. புதிய வழக்கறிஞரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால் நடிகை பலாத்கார வழக்கில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்கும் வரை விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு சார்பில் விசாரணை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :