விசாரணைக்கு பயந்து மருத்துவமனையில் அட்மிட் ஆன முதல்வரின் செயலாளர்

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறையின் விசாரணைக்கு பயந்து கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் இன்று மருத்துவமனையில் மீண்டும் அட்மிட் ஆனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரை மத்திய அமலாக்கத் துறை மற்றும் சுங்க இலாகாவை சேர்ந்த அதிகாரிகள் சுற்றிவளைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மத்திய அமலாக்கத் துறை சிவசங்கரை கைது செய்து இரண்டு முறை காவலில் எடுத்து விசாரித்தது. ஆனால் சுங்க இலாகா சிவசங்கரிடம் பலமுறை விசாரணை நடத்திய போதிலும் அவரை கைது செய்யாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சுங்க இலாகாவும் சிவசங்கரை கைது செய்து காவலில் எடுத்துள்ளது. இது தவிர நேற்று இந்த கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார் ஆகியோரையும் சுங்க இலாகா காவலில் எடுத்துள்ளது. இவர்கள் மூன்று பேரையும் ஒரே இடத்தில் வைத்து விசாரிக்க சுங்க இலாகா தீர்மானித்துள்ளது.

இதற்கிடையே மத்திய அமலாக்கத் துறை சிவசங்கரிடம் விசாரணை நடத்திய போது தங்கக் கடத்தல் தொடர்பான சில முக்கிய விவரங்கள் முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் செயலாளர் ரவீந்திரனுக்கும் தெரியும் என்று கூறியுள்ளார். இதையடுத்து ரவீந்திரனிடம் விசாரிக்க மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்தது. இதன்படி கடந்த 3 வாரங்களுக்கு முன் விசாரணைக்கு ஆஜராக கூறி மத்திய அமலாக்கத் துறை ரவீந்திரனுக்கு நோட்டீஸ் கொடுத்தது. ஆனால் விசாரணைக்கு முந்தைய நாள் தனக்கு கொரோனா பாதித்துள்ளதாக கூறி ரவீந்திரன் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் ஆனார். இதையடுத்து மத்திய அமலாக்கத் துறையால் அவரிடம் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து கடந்த வாரம் ரவீந்திரன் வீடு திரும்பினார். இதையடுத்து மீண்டும் அவரை விசாரிக்க மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்தது. இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் 27ம் தேதி (நாளை) விசாரணைக்கு ஆஜராக கூறி நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அவர் மீண்டும் மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளார். விசாரணையை தவிர்ப்பதற்காகவே அவர் மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மத்திய அமலாக்கத் துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds