சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

சபரிமலையில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.

கொரோனா பரவல் காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மண்டல காலத்தில் கடந்த வருடம் வரை லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்த நிலையில் இந்த வருடம் திங்கள் முதல் வெள்ளி வரை 1,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களின் வருகை குறைந்ததை தொடர்ந்து சபரிமலையில் வருமானம் கடுமையாக குறைந்துள்ளது. வழக்கமாக மண்டல காலத்தில் தினமும் சராசரியாக மூன்றரை கோடிக்கும் அதிகமாக வருமானம் கிடைக்கும். ஆனால் தற்போது தினமும் 10 லட்சத்திற்கும் குறைவாகவே வருமானம் கிடைத்து வருகிறது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதையடுத்து பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது தினசரி 1,000 பக்தர்களுக்கு அனுமதி உள்ள போதிலும் அதை விட குறைவாகவே பக்தர்கள் வருகின்றனர். எனவே தினசரி பக்தர்கள் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், பக்தர்கள் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் கேரள அரசு தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் இன்று திருவனந்தபுரத்தில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தேவசம் போர்டு, சுகாதாரத் துறை, காவல்துறை, பொதுப்பணித் துறை உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் எத்தனை பக்தர்களை அனுமதிப்பது என்று முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அரசிடம் பரிந்துரைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. விரைவில் இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. அந்த கூட்டத்தில் தான் எத்தனை பக்தர்களை அனுமதிப்பது என்பது முடிவு செய்யப்படும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds