கொரோனாவால் இவர்களுக்கும் அவதி.. மகாராஷ்டிராவில் பாலியல் தொழிலாளிகளுக்கு மாதம் 5,000 நிதியுதவி

கொரோனாவால் வருமானம் இன்றி அவதிப்படும் பாலியல் தொழிலாளிகளுக்கு மாதம் 5,000 ரூபாய் நிவாரண உதவி அளிக்க மகாராஷ்டிரா அரசு தீர்மானித்துள்ளது. இந்தியாவிலேயே பாலியல் தொழிலாளிகளுக்கு நிவாரண உதவி அளிக்கும் முதல் மாநிலம் மகாராஷ்டிரா தான் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக உலகில் பெரும்பாலான நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தும், வருமானம் இருந்தும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. பல நிறுவனங்களில் ஊழியர்களின் சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த காரணங்களால் பல மாநில அரசுகள் வருமானம் இன்றி தவித்து வரும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி அளித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா காலத்தில் வருமானம் இன்றி அவதிப்படும் பாலியல் தொழிலாளிகளுக்கு நிவாரண உதவி அளிக்க மகாராஷ்டிரா அரசு தீர்மானித்துள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் தான் கொரோனா மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த மாநிலத்தில் தான் தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. நேற்று 6,406 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. மரண எண்ணிக்கையும் இங்கு தான் அதிகமாகும். இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தற்போது மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா காரணமாக வருமானம் இன்றி தவித்து வரும் பாலியல் தொழிலாளிகளுக்கு உதவ மகாராஷ்டிர அரசு முன்வந்துள்ளது. இதன்படி மாதந்தோறும் 5,000 ரூபாய் நிவாரண உதவி அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் உள்ளவர்களுக்கு கூடுதலாக 2,500 ரூபாய் வழங்கப்படும். இந்தியாவிலேயே மகராஷ்டிரா மாநிலத்தில் தான் பாலியல் தொழிலாளிகள் அதிகமாக உள்ளனர். இந்த மாநிலத்தில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இந்த உதவி கிடைக்கும். இதற்காக அரசுக்கு 50 கோடி கூடுதல் செலவாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை உள்ள மூன்று மாதத்திற்கு முதல் கட்டமாக இந்த நிவாரண உதவி வழங்கப்படும். இதற்கான உத்தரவை மகாராஷ்டிரா அரசு பிறப்பித்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :