ஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி

ஆண் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தன்னுடைய 4 பெண் குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்று தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.ஹரியானா மாநிலம் குரு கிராமில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நூஹ் பிர்போலி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் குர்ஷித் அகமது. இவரது இரண்டாவது மனைவி பர்மினா (35). இவர்களுக்கு மஸ்கனா (7), மிஸ்கினா (5), அல்சிபா (3) மற்றும் 8 மாதமே ஆன ஒரு பிஞ்சு குழந்தை உள்பட 4 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு ஆண் குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருந்து வந்தது.

இது தொடர்பாகக் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று குர்ஷித் அகமது அந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நடந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தார். நள்ளிரவில் இவர் வீடு திரும்பியபோது கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகத் தட்டியும் அவரது மனைவி கதவைத் திறக்கவில்லை. சந்தேகமடைந்து ஜன்னல் வழியாகப் பார்த்தபோது பர்மினா கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.அதிர்ச்சி அடைந்த குர்ஷித் அகமது கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவரது 4 மகள்களும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். உடனே பர்மினாவிடமிருந்து கத்தியைப் பிடுங்கி குர்ஷித், உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு பர்மினாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து நூஹ் போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று 4 குழந்தைகளின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆண் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தான் 4 பெண் குழந்தைகளையும் கழுத்தை அறுத்துக் கொன்று பர்மினா தற்கொலை செய்ய முயற்சித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். பர்மினாவின் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரிடம் போலீசால் விசாரணை நடத்த முடியவில்லை.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :