சபரிமலையில் போலீசார், ஊழியர்களுக்கு கொரோனா பரவல் அதிகரிப்பு பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிக்கல்

சபரிமலையில் போலீசார் மற்றும் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வழக்கமாக மண்டல பூஜைகளின் போது சபரிமலையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள்.

ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாகப் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1,000 பேரும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பேரும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தரிசனத்திற்குச் செல்லும் போது 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் கொண்டு செல்ல வேண்டும்.

சபரிமலையில் மண்டலக் காலத்தில் தினமும் சராசரியாக 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கிடைப்பது உண்டு. ஆனால் பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால் கோவில் வருமானம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தினமும் சராசரியாக 10 லட்சத்திற்கும் குறைவாகவே வருமானம் கிடைத்து வருகிறது. இதனால் கோவில் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுதவிர சபரிமலையில் ஓட்டல்கள், கடைகள் உட்பட நிறுவனங்களில் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளன. இதன் மூலமும் சபரிமலை கோவில் நிர்வாகத்திற்குக் கிடைக்கும் வருமானம் குறைந்துவிட்டது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தது.

தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. இதுகுறித்து கேரள அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களாக ஆலோசித்து வந்தனர். கேரள தலைமைச் செயலர் தலைமையிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் கடந்த இரு வாரங்களில் கோவில் ஊழியர்கள், போலீசார் உள்பட 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியது.

இதையடுத்து உடனடியாக பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம் என்று தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அதிகரிப்பதாக இருந்தால் திங்கள் முதல் வெள்ளி வரை 2,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 3,000 பக்தர்களையும் மட்டும் அனுமதிக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :