உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் வாலிபர், இந்துப் பெண் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய போலீஸ்

உத்திரப் பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத் மற்றும் கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான சட்டம் அமலாகியுள்ள நிலையில் முஸ்லிம் வாலிபர் மற்றும் இந்துப் பெண்ணின் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். புதிய சட்டத்தின்படி முறையான அனுமதி பெற்ற பிறகே திருமணம் நடத்தமுடியும் என்று போலீசார் தெரிவித்ததால் திருமணம் நின்றது.உத்திரப் பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத் மற்றும் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக அவசரச் சட்டம் சமீபத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திற்கு உத்திரப் பிரதேச மாநில கவர்னர் ஒப்புதல் அளித்தார். இந்த புதிய சட்டத்தின்படி திருமணத்திற்குப் பின்னர் மதம் மாற விரும்பினால் 2 மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெற வேண்டும்.

மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்தவில்லை என்று அவர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும். இதை மீறினால் இந்த அவசரச் சட்டத்தின்படி ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். குற்றவாளி என்று நிரூபணம் ஆனால் 5 வருடம் வரை சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த பெண்ணை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி திருமணம் செய்தால் தண்டனை 3 முதல் 10 வருடம் வரை கிடைக்கும். கூட்டமாக மத மாற்றம் செய்தாலும் இந்த தண்டனை விதிக்கப்படும்.

இந்நிலையில் லக்னோ அருகே உள்ள பாரா என்ற பகுதியில் ஒரு முஸ்லிம் வாலிபருக்கும், இந்துப் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக லக்னோ போலீசுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்ததில் புகார் உண்மை எனத் தெரிந்தது. ஆனால் புதிய சட்டத்தின்படி அவர்கள் திருமணத்திற்கு முன் அனுமதி ஏதும் பெறவில்லை. இதையடுத்து திருமணத்தை நடத்துவதற்குத் தடை விதித்த போலீசார், இரு வீட்டினரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். திருமணத்திற்கு முன்பு லக்னோ மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்று போலீசார் அவர்களிடம் கூறினர்.

இதையடுத்து திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டது. இரு வீட்டினரின் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது என்றாலும் மாவட்ட மாஜிஸ்திரேட் அனுமதி பெற்ற பின்னரே திருமணம் நடத்த முடியும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து முறையான அனுமதி பெற்ற பின்னர் திருமணத்தை நடத்துவதாக இரு வீட்டினரும் போலீசிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை விடுவித்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :