விவசாயிகளுக்காக பதவியை ராஜினாமா செய்த பஞ்சாப் டி.ஐ.ஜி!

அமிர்தசரஸ்: விவசாயிகளுக்கு ஆதரவாகத் தனது டி.ஐ.ஜி பதவியைப் பஞ்சாப் அதிகாரி லக்மிந்தர் சிங் ஜக்கர் ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். 3 சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். ஆனால், சட்டத்தை ரத்து செய்ய விரும்பாத மத்திய அரசு, திருத்தங்கள் செய்வதாக உறுதி அளிக்கிறது.

இதற்கிடையே, விவசாயிகளுக்கு ஆதரவாகப் பஞ்சாப் மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பதவி வகிக்கும் லக்மிந்தர் சிங் ஜக்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக டி.ஐ.ஜி. லக்மிந்தர் சிங் ஜக்கர் கூறுகையில், தலைநகர் டெல்லியில் விவசாயிகள் அமைதியாகப் பல நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் குரல்களை மத்திய அரசு கேட்கவில்லை. நான் அரசுப் பணியில் இருக்கிறேன். எனவே, நான் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்க முடியாது. போராட்டத்தில் பங்கேற்கவும் முடியாது. இதனால் எனது பணியை ராஜினாமா செய்ய முடிவை எடுத்துள்ளேன் என்றார்.

நான் முதலில் ஒரு விவசாயி, பின்னர் தான் போலீஸ் அதிகாரி. எனக்கு இன்று எந்த பதவி கிடைத்தாலும், அதற்குக் காரணம் எனது தந்தை வயல்களில் விவசாயியாக பணியாற்றி என்னைப் படிக்க வைத்ததனால் தான். எனவே, விவசாயத்திற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்.

எனவே, வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் எனது விவசாயி சகோதரர்களோடு நானும் போராட்டத்தில் பங்கேற்க விரும்புகிறேன். இதனால், உடனடியாக என்னை டிஜிஜி பதவியில் இருந்து விடுவிக்கக்கோரி மாநில உள்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளேன் என்றும் தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :