தங்க கடத்தல் வழக்கு கேரள முதல்வரின் செயலாளர் நாளை ஆஜராக உத்தரவு

தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் ரவீந்திரனுக்கு மத்திய அமலாக்கத்துறை 4வது முறையாக நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதற்கு முன் 3 முறை நோட்டீஸ் கொடுத்த போதிலும் உடல் நலமில்லை என்று கூறி இவர் ஆஜராகாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. சிவசங்கரிடம் மத்திய அமலாக்கத் துறை, சுங்க இலாகா மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தங்கக் கடத்தலில் மட்டுமல்லாமல் வெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் உட்பட பல்வேறு முறைகேடுகளில் இவர் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரனுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக சிவசங்கர் தெரிவித்தார்.

இதையடுத்து ரவீந்திரனிடம் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்தது. இதன்படி விசாரணைக்கு ஆஜராகக் கோரி கடந்த மாதம் 6, 27 மற்றும் இந்த மாதம் 10 ஆகிய தேதிகளில் முறை மத்திய அமலாக்கத் துறை நோட்டீஸ் கொடுத்தது.ஆனால் 3 முறையும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. முதலில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் 2 முறை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி நோட்டீஸ் கொடுத்த போதிலும், உடல் நலமில்லை என்று கூறி மருத்துவமனையில் சேர்ந்தார். இதனால் 3 முறையும் அமலாக்கத் துறையால் ரவீந்திரனிடம் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் 4வது முறையாக நாளை விசாரணைக்கு ஆஜராகக் கூறி மத்திய அமலாக்கத் துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது. இம்முறையும் அவர் ஆஜராகாவிட்டால் மத்திய அமலாக்கத் துறை அவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் தனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மத்திய அமலாக்கத் துறை விசாரணைக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி ரவீந்திரன் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds