ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்துவதில் சிக்கல் சபரிமலையில் கூடுதல் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கவில்லை

ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவு வர காலதாமதம் ஆகும் என்பதாலும், இதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாலும் சபரிமலையில் இன்று முதல் 5,000 பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இதுவரை தொடங்கவில்லை. பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது வார நாட்களில் 2,000 பக்தர்களும், சனி ஞாயிறு ஆகிய நாட்களில் 3,000 பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 24 மணி நேரத்திற்குள் கொரோனா ஆண்டிஜன் பரிசோதனையும் நடத்தியிருக்க வேண்டும். இந்நிலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நெருங்கி வருவதால் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், டிச.20 (இன்று) முதல் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்கலாம் என்றும், பக்தர்கள் அனைவரும் ஆன்டிஜன் பரிசோதனைக்கு பதிலாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. சபரிமலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் 26ம் தேதிக்கு பின்னர் சபரிமலை வரும் பக்தர்கள் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே கேரள அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்று முதல் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு இந்த பரிசோதனை நடத்த வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்துவதற்கு குறைந்தது 2,500 ரூபாய்க்கு மேல் செலவாகும்.

சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக நிலக்கல் என்ற இடத்தில் ஏற்கனவே ஆண்டிஜன் பரிசோதனைக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். பரிசோதனை முடிவு கிடைப்பதற்கு காலதாமதம் ஆகும். இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால் உடனடியாக கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கேரள அரசு முடிவெடுத்துள்ளது. 24 மணி நேரத்திற்குள் இந்த பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என்பதால் பக்தர்கள் தாங்கள் புறப்படும் இடத்திலிருந்தே பரிசோதனை எடுத்து வரவும் முடியாது. எனவே இது தொடர்பாக நாளை உயர்நீதிமன்றத்தை அணுகவும் கேரள அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சபரிமலையில் உடனடியாக கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடியுமா என்பது சந்தேகம் தான் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :