உலகின் மிகப்பெரிய தனியார் விலங்கியல் பூங்கா! ரிலையன்ஸ் நிறுவனத்தின் திட்டம்!

ரிலையன்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில், விலங்கு, பறவைகள் மற்றும் ஊர்வன உட்பட 100 விதமான உயிரினங்களை உள்ளடக்கிய மிக பெரிய விலங்கியல் பூங்காவை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி கையில் எடுத்துள்ளார். இந்த விலங்கியல் பூங்காவானது 280 ஏக்கர் நிலப்பரப்பில், அவர்களின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை ஒட்டி அமைய உள்ளது.

இந்த விலங்கியல் பூங்காவிற்கு " பசுமை விலங்கியல் மறுவாழ்வு மற்றும் புணரமைப்பு கோட்டை" என்ற பெயரில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பொது மக்களின் பார்வைக்கு விடப்படும். மேலும் கொரோனா தொற்றின் காராணமாகவே வேலைகள் தடைபட்டுள்ளதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து ஏற்கனவே ஒப்புதலை பெற்று விட்டதாகவும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பரிமல் நத்வானி தெரிவித்துள்ளார். மேலும் மத்திய விலங்கியல் பூங்கா இணையதளத்தில் இந்த பூங்காவை பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் இந்தியாவின் காடுகள், தவளை வீடு, பூச்சுகளின் வாழ்க்கை, டிராகன் நிலம், கவர்ச்சிகரமான தீவு, குஜராத்தின் காடு வழி என பல தலைப்புகளில் கட்டமைப்புகள் உள்ளன. இந்த பூங்காவில் குறைக்கும் மான், சோம்பல் கரடி, சிறுத்தைகள், இந்திய ஓநாய் போன்ற உயிரினங்கள் ஆறு கூண்டுகளில் அடைக்கப்பட்டு மக்களை கவர, பார்வைக்கு வைக்கப்படும். மேலும் ஆப்ரிக்க சிங்கம், 12 தீக்கோழிகள், 20 ஒட்டகச்சிவிங்கி, 18 மங்கூஸ், 10 முதலைகள், 7 சிறுத்தைகள், ஆப்ரிக்க யானை, தவளை அரங்கில் சுமார் 200 வகை மற்றும் நீர்வாழ் அரங்கில் 350 விதமான மீன்கள் ஆகியவை பூங்காவில் அமைக்கப்பட உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :