இளம்பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்று எரித்த முன்னாள் காதலன்

தன்னை மறந்து வேறு ஒருவரைக் காதலித்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், இளம்பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொன்று பின்னர் தீ வைத்து எரித்தார். இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் அனந்தபூர் என்ற இடத்தில் நடந்துள்ளது.ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர் கூட்டி ராஜேஷ் (26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சினேகலதா (19) என்ற இளம்பெண்ணைக் காதலித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சினேக லதாவுக்கு ஸ்டேட் வங்கியில் வேலை கிடைத்தது. இதன் பின்னர் அவர் காதலன் ராஜேஷை ஒதுக்கத் தொடங்கினார். மேலும் அவர் வேறு ஒரு வாலிபரைக் காதலிக்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் ராஜேஷுக்கு தெரியவந்தது. இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று சினேக லதாவை போனில் அழைத்த ராஜேஷ், தன்னுடன் அங்குள்ள ஒரு பூங்காவுக்கு வருமாறு கூறியுள்ளார். அதற்கு சினேகாவும் சம்மதித்துள்ளார். இதையடுத்து சினேகலதாவை ராஜேஷ் தன்னுடைய பைக்கில் அழைத்துச் சென்றார்.வழியில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சினேகலதாவை ராஜேஷ் கழுத்தை நெரித்துக் கொன்றார். பின்னர் அவர் தயாராகக் கொண்டு வந்த பெட்ரோலை அவரது உடலில் ஊற்றி தீ வைத்தார்.

இதன் பின்னர் ராஜேஷ் அங்கிருந்து சென்று விட்டார். சினேகலதாவை நீண்ட நேரம் காணாததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் சினேகலதா கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சினேகலதாவை கொன்றது அவரது முன்னாள் காதலன் ராஜேஷ் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :