டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு இலவச WIFI: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு இலவச வைஃபை வசதியை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 34 நாட்களாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். எனவே, வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்கங்களுடன் 5 முறை மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து, வரும் 31-ம் தேதி 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, 34 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு முக்கியமாக செல்போன் பயன்படுகிறது. செல்போன் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. எனவே, செல்போன் வைத்திருந்தாலும், இணைய வசதி தேவைப்படுகிறது. எனவே, விவசாயிகளுக்கு இணைய வசதி பூர்த்தி செய்ய ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சாதா கூறுகையில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி சார்பில் விவசாயிகளுக்கு இலவச WIFI வசதியை கொடுக்க முடிவு செய்துள்ளோம். அதன் ஒரு பகுதியாக அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் முதல் WIFI ஹாட்ஸ்பாட் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினர் பலவிதமான உதவிகள் செய்து வரும் நிலையில், இலவச WIFI வசதி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :