81 வது பிறந்த நாள் அமெரிக்காவில் இருந்து ஆன்லைனில் கச்சேரி நடத்திய ஏசுதாஸ்

கொரோனா பரவல் காரணமாகப் பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் நேற்று தன்னுடைய 81வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கொல்லூர் மூகாம்பிகா தேவி கோவிலுக்கு வரவில்லை. ஆனாலும் அமெரிக்காவில் இருந்தபடியே அவர் ஆன்லைனில் பக்தி இசைக் கச்சேரி நடத்தி அனைவரையும் நெகிழ வைத்தார்.பழம்பெரும் சினிமா பாடகரும், கர்நாடக இசைக் கலைஞருமான கே.ஜே. யேசுதாஸ் நேற்று தன்னுடைய 81வது பிறந்த நாளை கொண்டாடினார்.

யேசுதாஸ் தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள மூகாம்பிகா தேவி கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்து விட்டு பின்னர் அங்கு பல மணி நேரம் கர்நாடக இசைக் கச்சேரி நடத்துவது வழக்கம். கடந்த 47 வருடங்களாக இவர் தன்னுடைய பிறந்த நாளை இப்படித் தான் கொண்டாடி வருகிறார். யேசுதாசின் இந்த இசைக் கச்சேரியை கேட்பதற்காக அவரது பிறந்த நாளின் போது கொல்லூர் மூகாம்பிகா தேவி கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஏராளமானோர் குவிவது வழக்கம். இந்த வருடமும் அவரது இசைக் கச்சேரி கேட்பதற்காக கொல்லூர் செல்ல ஏராளமானோர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக யேசுதாஸ் இம்முறை தன்னுடைய 47 வருட வழக்கத்தை முதன் முதலாக மாற்றியுள்ளார். இந்த வருடம் தன்னால் கொல்லூர் மூகாம்பிகா கோவிலுக்கு வர இயலாது என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனாலும் அவரது ரசிகர்கள் வழக்கமான அந்த நடைமுறையை மாற்ற விரும்பவில்லை. அவருடன் இசைக் கச்சேரி நடத்தும் கலைஞர்கள் வழக்கம் போலவே கொல்லூர் கோவிலில் கச்சேரி நடத்தத் தீர்மானித்தனர். இது குறித்து அறிந்த ஏசுதாஸ், தானும் ஆன்லைன் மூலம் கச்சேரி நடத்த விருப்பம் தெரிவித்தார். இதன்படி நேற்று கொல்லூர் மூகாம்பிகா தேவி கோவிலில் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது.

யேசுதாஸ் அமெரிக்காவில் டல்லாஸ் நகரிலுள்ள தன்னுடைய வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் கச்சேரி நடத்தினார். ஏசுதாசின் கச்சேரியை நேரடியாக பார்க்கவும், கேட்கவும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் ஆன்லைன் மூலம் அவர் நடத்திய கச்சேரியைப் பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். கச்சேரியை ஆன்லைனில் முழுவதும் பார்த்த பின்னரே அனைவரும் அங்கிருந்து சென்றனர். கோவிலுக்கு நேரடியாக வர முடியாவிட்டாலும் ஆன்லைனில் இருந்தபடியே யேசுதாஸ் தன்னுடைய வழக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :