ஆர் சி, இன்சூரன்ஸ், லைசன்ஸ், ஹெல்மெட் எதுவும் இல்லை மோட்டார் பைக்குக்கு ₹ 1.13 லட்சம் அபராதம்

ஆர் சி, இன்சூரன்ஸ், லைசென்ஸ், ஹெல்மெட் எதுவும் இல்லாமல் வந்த ஒரு மோட்டார் பைக்குக்கு ஒடிஷா மாநில போக்குவரத்து போலீசார் ₹ 1,13,500 அபராதம் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒடிஷா மாநிலத்தில் கடந்த வருடம் சாலை விபத்துகள் மிக அதிக அளவில் நடந்தன. மேலும் சாலை விபத்துக்களில் மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்தது. கடந்த வருடம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடந்த சாலை விபத்துகள் மூலம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை, முன் வருடம் அதே 2 மாதங்களில் நடந்த மரணத்தை விட 27.5 சதவீதம் அதிகரித்தது.

இதையடுத்து சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஒடிஷா மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த அறிக்கையில் ஒடிஷாவில் சாலை விபத்தில் அதிகரிப்பது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சாலை விதிகளை கடுமையாக்கவும், வாகன பரிசோதனையை அதிகரிக்கவும் மாநில அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போக்குவரத்து போலீசார் சோதனையை அதிகரித்துள்ளனர்.

இந்நிலையில் இங்குள்ள ராயகடா என்ற பகுதியில் போக்குவரத்து போலீசார் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் எதுவும் இல்லாமல் வந்த ஒரு பைக்கை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் அந்த பைக் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை என தெரியவந்தது. ஆர்சி புத்தகம், லைசென்ஸ், இன்சூரன்ஸ் உள்பட அந்த வாகனம் தொடர்பான எந்த ஆவணங்களும் அந்த நபரிடம் இல்லை. மேலும் அந்த நபர் ஹெல்மெட்டும் போடவில்லை. இதையடுத்து அந்த பைக்கை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார் கடுமையான அபராதம் விதிக்க தீர்மானித்தனர்.

இதன்படி நம்பர் இல்லாத குற்றத்திற்காக ₹ 5000, லைசன்ஸ் இல்லாததால் ₹ 5000, இன்சூரன்ஸ் மற்றும் ஆவணங்கள் இல்லாததால் ₹ 2000, ஹெல்மெட் போடாததற்கு ₹ ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வாகனத்தை பதிவு செய்யாததால் வாகனம் விற்பனை செய்த டீலருக்கு ₹ 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தத்தில் அந்த பைக்குக்கு ₹1,13,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது அந்த பைக்கின் விலையை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் இதே ராயகடா பகுதியில் பிஜு ஜனதா தளம் கட்சி நடத்திய வாகன பேரணியில் கலந்து கொண்ட பாஸ்கர் ராவ் என்ற எம்.பி. ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் அவருக்கு ₹ 500 அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :