பூடான், மாலத்தீவுக்கு சென்றடைந்த இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி

இந்தியா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பங்களாதேஷ், நேபாளம், பூடான் உட்பட நம்முடைய 6 அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி பூடான் மற்றும் மாலத்தீவை இன்று அடைந்தது.இந்தியாவின் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி வெற்றிகரமாக நாடு முழுவதும் சுகாதார ஊழியர்களுக்குப் போடப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக 3 கோடி பேருக்கு இந்த தடுப்பூசி போடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த தடுப்பூசி தொடர்பாக வேறு எந்த புகார்களும் வரவில்லை. இந்நிலையில் இந்த தடுப்பூசியை நம்முடைய அண்டை நாடுகளான மாலத்தீவு, பூடான், பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் மற்றும் செஷல்ஸ் ஆகிய நாடுகள் வாங்கத் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக இந்த 6 நாடுகளும் இந்திய அரசுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

இந்நிலையில் முதல் கட்டமாக இன்று பூடான் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு சிரம் இன்ஸ்டிடியூட்டின் தடுப்பு மருந்தான கோவிஷீல்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை அந்நாட்டின் உயர் அதிகாரிகள் முறைப்படி பெற்றுக் கொண்டனர்.விரைவில் பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் மற்றும் செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்குத் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதுதவிர ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகளும் இந்தியாவிடம் இருந்து தடுப்பு ஊசியை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தென்கொரியா, கத்தார், சவுதி அரேபியா, மொராக்கோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய வெளிநாடுகளும் இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :