ரெயிலில் ஜன்னலை பூட்ட முடியாததால் மழையில் நனைந்த பயணிக்கு ₹ 8,000 நஷ்ட ஈடு

ஓடும் ரயிலில் ஜன்னலை பூட்ட முடியாததால் மழையில் நனைந்த பயணிக்கு ₹ 8 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஒரு பயணி தொடர்ந்த வழக்கில் 7 வருடங்களுக்கு பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் செபஸ்டியன். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன் இவர் திருச்சூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ஜனசதாப்தி ரயிலில் பயணம் செய்தார். ரயிலில் ஏறிய சிறிது நேரத்திலேயே மழை பெய்தது.

உடனடியாக பயணிகள் அனைவரும் ரயிலுக்குள் மழைநீர் தெறிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஜன்னலை பூட்டத் தொடங்கினர். ஆனால் செபஸ்டியன் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே இருந்த ஜன்னலை பூட்ட முடியவில்லை. பலமுறை முயற்சித்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதுகுறித்து செபஸ்டியன் டிக்கெட் பரிசோதகரிடம் கூறினார். எர்ணாகுளம் வந்த பின்னர் அதை சரி செய்வதாக அவர் கூறினார். ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் செபஸ்டியன் திருவனந்தபுரம் வரை ஜன்னல் வழியாக தெறித்த மழை நீரில் நனைந்தபடியே சென்றார்.

திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இறங்கிய பின்னர் செபஸ்டியன் இதுகுறித்து திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் அளித்தார். உடனடியாக அந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக ஸ்டேஷன் மாஸ்டர் உறுதி அளித்தார். ஆனால் பல மாதங்கள் ஆன பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து ரெயில்வேயின் அலட்சியம் காரணமாக மழையில் நனைந்து அவதிப்பட்ட தனக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு கோரி செபஸ்டியன் திருச்சூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், செபஸ்டியனுக்கு ₹ 8 ஆயிரம் நஷ்டஈடு வழங்க ரயில்வேக்கு உத்தரவிட்டது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :