6வது மனைவி உறவுக்கு சம்மதிக்கவில்லை.. 7வது திருமணத்திற்கு தயாராகும் 64 வயது முதியவர்

4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்த தன்னுடைய 6வது மனைவி உறவு கொள்ள மறுத்ததால் வெறுப்படைந்த 64 வயது முதியவர், அவரை விவாகரத்து செய்துவிட்டு 7வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.திருமணம் செய்வதும், பின்னர் விவாகரத்து செய்வதும் எல்லாம் வழக்கமான ஒன்று தான். ஆனால் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர், தான் 6வதாக திருமணம் செய்த மனைவி உறவுக்கு மறுத்ததால் அவரை விவாகரத்து செய்துவிட்டு 7வது திருமணம் செய்யத் திட்டம் போட்டு வரும் வினோத சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் தாகியா (64). இவர் ஏற்கனவே 5 பெண்களைத் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பரில் தாகியா, தன்னை விட 22 வயது குறைவான ஒரு பெண்ணை 6வதாக திருமணம் செய்தார். இது தன்னுடைய கணவனின் 6வது திருமணம் என்று விதவையான அந்தப் பெண்ணுக்கு தெரியாது.திருமணத்திற்குப் பின்னர் தன்னுடைய சொத்து, பணம் முழுவதையும் தருவதாக அந்தப் பெண்ணுக்கு தாகியா வாக்குறுதி கொடுத்திருந்தார். இதை நம்பி அவரும் தாகியாவை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் ஒரு சில மாதங்களிலேயே அவர்களது திருமண வாழ்க்கை கசந்தது. இதனால் தன்னுடைய 6வது மனைவியையும் விவாகரத்து செய்யப் போவதாக தாகியா தெரிவித்துள்ளார்.

அதற்கு என்ன காரணம் என்பது குறித்து அவர் கூறியது: என்னுடைய 6வது மனைவி என்னுடன் உறவு கொள்ள மறுத்து வருகிறார். என்னுடன் உறவு கொண்டால் எனக்கு இருக்கும் நோய் தனக்கும் வரும் என அவர் பயப்படுகிறார். எனக்கு இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி உள்படப் பல நோய்கள் உள்ளன. என்னுடன் உறவு கொள்ளும் மனைவி தான் எனக்கு தேவையாகும். எனவே 6வதாக திருமணம் செய்த மனைவியை விவாகரத்து செய்யத் தீர்மானித்துள்ளேன் என்று கூறினார். 7வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய தாகியா தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் பெண் பார்க்கும் படலத்தையும் தொடங்கி விட்டார்.

இதுகுறித்து தாகியாவின் 6வது மனைவி கூறியது: என்னுடைய கணவர் இதற்கு முன்பு 5 பெண்களை திருமணம் செய்துள்ளார் என்ற விவரம் எனக்கு தெரியாது. அதை அவர் என்னிடமிருந்து மறைத்து விட்டார். தற்போது என்னை இருட்டுக்குள் தள்ளிவிட்டு அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளார். அவரது முதல் மனைவியும் இதே கிராமத்தில் தான் வசித்து வருகிறார். தாகியா 7வதாக ஒரு திருமணம் செய்ய உள்ளார் என்பதை நான் இந்த கிராமத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளேன் என்று கூறினார். தாகியாவின் முதல் மனைவி அவர் வசிக்கும் அதே கிராமத்தில் தான் 5 குழந்தைகளுடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :