சென்னையில் புதிய கொரோனா பாதிப்பு 134 ஆக குறைந்தது..

சென்னையில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 150க்கு கீழ் சென்றுள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் மாநிலம் முழுவதும் தினமும் 5 ஆயிரம், 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்து பெரும் பீதியை ஏற்படுத்தியது. தினமும் 200, 300 பேர் இந்த நோய்க்கு பலியாயினர். கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு குறையத் தொடங்கியது. தற்போது தினமும் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

தமிழக அரசு நேற்று(பிப்.1) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, 51,644 பரிசோதனைகள் செய்ததில் புதிதாக 502 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களைச் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 38,842 ஆக உயர்ந்தது.மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 517 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 21,949 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 7 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,363 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4532 பேராகக் குறைந்துள்ளது. புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 500 ஆகக் குறைந்து வருவதாலும் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.சென்னையில் தினமும் புதிதாக 150 பேர் வரையிலும், கோவையில் 80 பேர் வரையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது இந்த மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களிலுமே புதிதாக நோய் பாதிப்பவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.சென்னையில் நேற்று புதிதாக 134 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 30 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. அதே போல், கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் 59 பேருக்கும் திருப்பூர் மாவட்டத்தில் 27 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 24 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.மற்ற மாவட்டங்களில் புதிதாகத் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15க்கும் கீழ் குறைந்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :