மோடியை கொல்லத் தயார் ஐந்து கோடி தர யார் தயார்? முகநூலில் சவால் விட்டவர் கைது

by Balaji, Feb 5, 2021, 16:40 PM IST

புதுச்சேரி அருகே உள்ள அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யானந்தம் (43). இவர் தனது முகநூலில் , பிரதமர் மோடியை போட தயார். அதற்கு ரூ.5 கோடி கொடுக்க யார் தயார்? என்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.இதைக் கண்ட மணவெளி பகுதியைச் சேர்ந்த தங்கதுரை என்பவர், பொது அமைதி சீர்குலைக்க முயற்சித்த சத்யானந்தம் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி என்று அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து சத்யானந்தத்தை கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாபட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

You'r reading மோடியை கொல்லத் தயார் ஐந்து கோடி தர யார் தயார்? முகநூலில் சவால் விட்டவர் கைது Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை