மாசி மாத பூஜை சபரிமலையில் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வசதி

மாசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. நாளை மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. வரும் 13ம் தேதி முதல் 5 நாட்களுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.கேரளாவில் கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதால் சபரிமலை செல்லும் பக்தர்களுக்குக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே கடந்த நான்கு மாதங்களாகச் சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.மண்டலக் காலம் முடியும் வரை ஆன்டிஜன் பரிசோதனை நடத்தினாலே போதுமானதாக இருந்தது.

ஆனால் சபரிமலையில் நோய் பரவல் மேலும் அதிகரித்ததால் மகரவிளக்கு காலம் முதல் ஆர்டிபிசிஆர், ஆர்டி லேம்ப், ட்ரூ நாட் ஆகிய பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டது. இந்த பரிசோதனை நடத்தி நெகட்டிவ் ஆனவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் சபரிமலையில் இதுவரை ஆன்டிஜன் பரிசோதனைக்கு மட்டுமே வசதி இருந்தது. இதனால் பக்தர்கள் சபரிமலை செல்லும் வழியில் இந்த வசதி உள்ள இடத்திலிருந்து பரிசோதனை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இது பக்தர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

இதனால் சபரிமலையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாசி மாத பூஜைகள் நடை திறக்கப்படும் நாள் முதல் சபரிமலையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வசதி ஏற்படுத்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்தது. மாசி மாத பூஜைகளுக்காக நாளை (12ம் தேதி) மாலை நடை திறக்கப்படுகிறது. 13ம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். இந்த 5 நாட்களிலும் தினமும் 5,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய இடங்களில் ஆர்டிபிசிஆர் மற்றும் ஆர்டி லேம்ப் பரிசோதனை நடத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இதற்குக் கட்டணம் ₹ 1150 ஆகும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :