குழந்தையை காப்பாற்ற பிரதமரை நாடிய தம்பதி: ரூ.6 கோடி இறக்குமதி வரியை ரத்து செய்த மத்திய அரசு!

அரிதான மரபணு நோயினால் அவதிப்பட்டு வரும் 5 மாத குழந்தையான டீராவின் உயிர்காக்கும் மருந்தின் மீதான 6 கோடி ரூபாய் இறக்குமதி வரியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.

மகாராஷ்ரா மாநிலம் மும்பை அந்தேரி பகுதியில் வசிக்கும் பிரியங்கா - மிஹிர் தம்பதியர் தங்கள் குழந்தைக்கு கிராவுட் ஃபண்டிங் முறையில் நிதி திரட்டி, அந்த நிதியை கொண்டு அமெரிக்காவிலிருந்து 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை ஆர்டர் செய்துள்ளனர். இருப்பினும், 16 கோடிக்கு நிதி திரட்டி மருந்து வாங்கினாலும், அதனை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய மத்திய அரசிற்கு ரூ.6 கோடி ஜி.எஸ்.டி வரியாக செலுத்த வேண்டும்.

எனவே, ரூ.6 கோடி வரியை எப்படியாவது மத்திய அரசிடம் பேசி தள்ளுபடி செய்ய வைக்க வேண்டும் என மகாராஷ்டிரா சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உதவியுடன் பிரதமர் மோடியை நாடியுள்ளனர். தங்களால் முடிந்த அளவிற்கு ரூ.6 கோடி ஜிஎஸ்டி வரியை மட்டும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேவேந்திர பட்னாவிஸ், பிரதமர் நரேந்திர மோடியுடனும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குழந்தை டீராவின் உயிர்காக்கும் மருந்தின் மீதான 6 கோடி ரூபாய் இறக்குமதி வரியை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரும், மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தையின் மருந்து இறக்குமதி மீதான வரியை தள்ளுபடி செய்தற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பட்னாவிஸ் கடிதம் எழுதியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :