புதுச்சேரி: கட்டிடத் திறப்பு விழாவுக்கு கவர்னர் விதித்த தடை

புதுச்சேரி நகராட்சியின் புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்ள முதல்வர் நாராயணசாமி வந்திருந்தார் ஆனால் விழாவில் மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவேண்டும் என கூறி அதன் திறப்பு விழாவை கிரண்பேடி தடுத்து விட்டார்.இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:நகராட்சியின் கட்டிடத் திறப்பு விழாவிற்கு யாரை அழைக்க வேண்டும் என்பது குறித்துச் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும். எல்லா ஏற்பாடும் முறைப்படி திறப்பு விழா நடக்க இருந்த நிலையில் தற்போது கடற்கரை பாதுகாப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்த கட்டிடம் கட்டப்பட்டதாகவும் அதன் திறப்பு விழாவில் மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவேண்டும் எனக் கூறி அதன் திறப்பு விழாவை கவர்னர் கிரண்பேடி தடுத்து நிறுத்தியுள்ளார்.

தற்போது கட்டப்பட்டுள்ள நகராட்சி கட்டிடம் உலக வங்கியின் நிதி உதவியுடன் கட்டப்பட்டது. இதில் மத்திய அரசின் நிதி எங்கு உள்ளது என்பதை மக்களுக்கு கிரண்பேடி தெளிவு படுத்த வேண்டும்.தன்னை விழாவிற்கு அழைக்கவில்லை என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அரசைக் காரணம் காட்டி திறப்பு விழாவை கிரண்பேடி நிறுத்தியுள்ளார். விழாவில் கலந்து கொள்ளத் துணைநிலை ஆளுநர் விரும்பினால் தாராளமாகக் கலந்து கொள்ளலாம்.மத்திய அரசிற்குச் சம்பந்தம் இல்லாத விழாவில் மத்திய அரசின் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும் எனக் கூறுவது தவறானது. புதுச்சேரியின் வளர்ச்சிக்கான திட்டத்திற்கு இது போன்று தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகிறார் என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :