இரட்டை குழந்தைகள் திடீரென்று பொம்மையாக மாறிய அதிர்ச்சி சம்பவம்..

by Logeswari, Feb 12, 2021, 17:02 PM IST

பிறக்காத குழந்தையை இறந்து பிறந்ததாக கூறி கல்லறையில் குழந்தைக்கு பதிலாக பொம்மையை புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்தவர் டவ்வுட் டுடோவ். இவருக்கும் இவரது மனைவிக்கும் திருமணம் முடிந்து பல ஆண்டுகள் கடந்தும் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. வருத்தம் இருவரின் மனதில் இருந்தாலும் வெளிக்காட்டி கொள்ளாமல் இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் டவ்வுட்டின் மனைவி அவரிடம் வந்து தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தங்களுக்கு பாப்பா பிறக்க போகிறது என்று இருவரும் சந்தோஷத்தில் அன்பை பரிமாறி கொண்டனர்.

டவ்வுட் அடிக்கடி வேலை விஷயமாக வெளியே செல்வதால் அவரது மனைவி மட்டும் மருத்துவமனைக்கு பக்கத்தில் வீடு எடுத்து தனியாக தங்கியுள்ளார். ஒரு நாள் அவரது மனைவி போன் செய்து நமக்கு இரட்டை குழந்தை இறந்து பிறந்துள்ளதாக கூறியுள்ளார். உடனே குழந்தைகளை அடக்கம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வற்புறுத்துகின்றனர் என்று கூறி போனை துண்டித்துள்ளார். டவ்வுட் நேராக கல்லறைக்கு சென்று தனது குழந்தைகள் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி வெள்ளை துணியால் போர்க்கப்பட்ட குழந்தையை பார்த்து கதறி கதறி அழுதுள்ளார்.

குழந்தைகளின் முகத்தை பார்க்க துண்டை விளக்கிய பொழுது வெறும் பொம்மை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த டவ்வுட் மருத்துவமனை மேல் போலீஸில் புகார் அளித்துள்ளார். அப்பொழுது போலீஸ் விசாரணை நடத்திய பொழுது டவ்வுட்டின் மனைவி கர்ப்பமே ஆகவில்லை என்ற விஷயம் தெரியவந்தது. தான் கர்ப்பம் என்று அவரே நினைத்து கொண்ட சூழலில் அது நாளடைவில் பொய் என்று தெரிய வந்தபோது கணவனின் சந்தோசம் பாதிக்கப்படும் என்பதால் எந்த பொய்யை கூறினேன் என்று டவ்வுட்டின் மனைவி தரப்பில் இருந்து வெளிவந்தது.

You'r reading இரட்டை குழந்தைகள் திடீரென்று பொம்மையாக மாறிய அதிர்ச்சி சம்பவம்.. Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை